Comic fan

Monday, December 29, 2025

Aruvi - Review

 பார்த்ததில் வலித்தது "அருவி"

வித்யாசமான படம் என்ற அறிமுகத்துடன் படம் பார்க்க சென்றோம். குழப்பமான ஆரம்பம். போலீஸ் .. கெடுபிடி .. மழை .. விசாரணை .. ஹிந்தி பேசும் மேலதிகாரி என்று சில நிமிடங்கள் களேபரம்..
ஒரு சிறுமி, அழகான குடும்பம், நாறுது என்று சொன்னவுடன் புகை பிடிப்பதை நிறுத்திய அப்பா, அக்காவின் பிறந்த நாளுக்கு சிறு பரிசு வாங்கி வரும் தம்பி, அனைவரையும் அரவணைத்து வரும் அம்மா என்று ஆரவாரமில்லாமில் அமைதியாக துவங்கியது படம்.
எந்த பாவமும் செய்யாத அப்பாவிக்கு எய்ட்ஸ் எனும் சாபம். குடும்பத்தில் அருவருப்பு. மீண்டும் புகை பிடிக்கும் அப்பா. மிரண்டு போன அம்மா. வெறுப்பை வீசும் தம்பி என்று எல்லாமே மாறிப் போவது வியப்பல்லவே.
அந்தரங்கத்தை பகிரங்கமாக்கி பிணம் தின்னும் "சொல்வதெல்லாம் உண்மை" எனும் கேடு கேட்ட நிகழ்ச்சியை முன்பே ஊர்வசி "பேசுவதெல்லாம் உண்மை" என்று கிண்டலடித்திருந்தாலும் இந்த படத்தில் வச்சி செஞ்சிருக்காங்க .. அடுத்தவரின் அவலத்தை அம்பலமாக்கி அதில் சோறு தின்பதற்கு பதிலாக லட்சுமி ராமகிருஷ்ணன் நாண்டு கொண்டு சாகலாம். எது எப்படி இருந்தால் நமக்கென்ன TRP ரேட்டிங்தான் முக்கியம் என்று அலையும் தொலைக்காட்சி சானெல்களுக்கு செருப்படி. திருந்துவோமா நாம்.
பலவீனமான தருணங்களில் அடுத்தவரை மேயும் சமூகத்திற்கு உதாரணமாக மூன்று நபர்கள் தோழியின் அப்பா (மனைவியை இழந்தவர்), ஆன்மிகம் எனும் போர்வை போர்த்திய ருத்திராட்சப் பூனை, எல்லா விதமான அல்லல்களுக்கும் பெயர் போன கார்மெண்ட் தொழிற்சாலை மேலாளர், இவர்களை வைத்து நிகழ்ச்சியை ஈடேற்றலாம் என்று ஆரம்பிக்கும் துணை இயக்குனர், முடிந்தால் இந்த அபலையை கபளீகரம் செய்யலாம் என்று திட்டமிடும் இயக்குனர், தொகுப்பாளினியாக லட்சுமி கோபாலகிருஷ்ணன் என்று தேர்ந்தேடுத்து கோர்த்திருக்கும் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு ஒரு ஷொட்டு. அபார தைரியம் அதிதி பாலனுக்கு.
அருவிக்கு எய்ட்ஸ் என்று தெரிந்தவுடன் முகம் சுளிக்கும் தொகுப்பாளினி, அருவெறுப்பில் நெளியும் மூவர், சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி டென்ஷன் ஏற்றும் நிகழ்ச்சி இயக்குனர் என்று சக்கைப் போடு போட்டிருக்கிறார்கள். தனக்கு எய்ட்ஸ் இல்லை என்று தெரிந்தவுடன் அருவியின் மீது மேலாளர் பாயும் வரை சும்மா இருந்த அருவி சீறிப் பாய்கிறது. நிகழ்ச்சி இயக்குனரை சுட்டது தப்பேயில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒரு task என்று roulette மூலம் அமைத்துக் கொடுக்கும் போது மேலாளருக்கு உள்ள மெல்லிய மனது, கிழவியின் மரணத்தை விவரிக்கும் தருணத்தில் பட்டினத்தார் பாடல் என்று நல்ல தேர்வு. மீண்டும் கோமதி கோபாலக்ரிஷ்ணனை நினைவூட்டும் நகைச்சுவைக் காட்சி "சொல்வதெல்லாம் உண்மைக்கு" சாட்டையடி.
சந்தில் சிந்து பாடி ஒரு பாட்டில் பீர் சொல்லும் சுபாஷ் யதார்த்தம்.
எல்லாம் முடிந்து சரணடையும் அருவியிடம் தன வீர தீர பிரதாபத்தை காட்டுவதாக அமையாமல் "Dont Quit" என்று வாழ்த்து அட்டை அனுப்பும் போலீஸ் அதிகாரி மனதில் நிற்பார். நோயுண்ட அனைவரும் படும் பாட்டை காட்டி மனதை நெருடியிருக்கிறார்கள். அப்பா, அம்மா, தம்பி என்று சம்பந்தப் பட்ட அனைவரும் அருவியைக் காணச் செல்வது வெகு பொருத்தம்.
என்ன செய்து என்ன பயன் .. திரை அரங்கை விட்டுவெளியே வரும்போது, "பேசாமல் வேலைக்காரன் பார்த்திருக்கலாம்" என்று அங்கலாய்த்த பொது ஜனம்..

0 Comments:

Post a Comment

<< Home