Water !
900 வருடங்களில் இண்டஸ் நாகரிகம் அழிந்து போனதாக பேப்பர்ல போட்டிருந்தாங்க .. எரிஞ்சு போச்சு ...
நாகரிகம் முத்திப் போயிதான் எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு சொன்னா, நம்மள கேனப் பயன்னு சொல்ராங்க. கிணத்துல சேந்தி குளிச்ச காலத்துலே தண்ணிக்கு மரியாதை இருந்துச்சு. எப்போ குழாயில் தண்ணி வந்ததோ அப்பவே ஆரம்பிச்சுது கேடு காலம். நாகரிகம் முத்திப்போயி ஷவரும் பாத் டப்பும் வந்ததுக்கு அப்புறம் சொல்லவே வேண்டாம். தண்ணீர் தண்ணீர் படத்துல வந்த வசனம்தான் நினைவுக்கு வருது... கிணறு இருந்த வீட்டில எல்லாம் இப்போ எண்ணை வர்ற ஆழத்துக்கு போர். உனக்கு எனக்குன்னு போட்டி போட்டு ஆழ்துளை கிணறுகள். Fossil water எனப்படுவது தொடவே கூடாதும்பாங்க. அதுக்கும் கீழே போயாச்சு.
குத்த வச்சு கக்கா போயிட்டு அலம்பினமா போனோமான்னு இருந்த நம்மள கெடுத்தது வெஸ்டர்ன் கமோடு. இப்போ நாட்டுல பாதி பேருக்கு "உக்காரவே" முடியாத சூழ்நிலை. அரை பக்கெட் தண்ணியில போனதை இப்போ 20 லிட்டர் தண்ணி கொட்டி போக வச்சுக்கிட்டு இருக்கோம். இதுல தொடைக்க பேப்பர் வேற. இப்போ ஜப்பான்காரன் கண்டுபிடிச்சான் ஜாக்கி சான் கண்டுபிடிச்சான்னு சொல்லி Squatty Pottyன்னு புது கலவரம். தாய்மார்கள் காலில உக்கார வச்சு குழந்தைய பழக்கின காலம் போயி இப்போ Pampers போட்டு மூட்டை கட்டுறாங்க. குழந்தைங்க போச்சா போகலியான்னு கூட தெரியாம அப்படியே மூட்டையோட சுத்திகிட்டு கிடக்குதுங்க. நேரத்துல எழுந்திருக்கிற குழந்தையை தன்னோட கையலாகத்தனத்துக்கு ஏதுவா தூங்க வைக்கிறாங்க. அப்புறம் எங்கே காலைக் கடன் ? சரி அந்த மூட்டையாவது ஒழுங்கா dispose செய்யறாங்களான்னா, அதுவும் கிடையாது. குப்பைத்தொட்டியில் போட்டு கார்பொரேஷன் தலையில காட்டுறாங்க. Manual Scavenging ஒழிச்சாச்சு மார் தட்டுனதுதான் மிச்சம். குப்பைத்தொட்டி பக்கம் போகமுடியல.
சில புத்திசாலிங்க வீட்டுல இருக்கற வெஸ்டர்ன் கமோடுலயே மூட்டைய dispose செஞ்சதுல அடைப்பு முட்டுனதுதான் மிச்சம். நவநாகரீகம் அப்படின்னு சொல்லி சானிட்டரி நாப்கின் மற்றும் tampon. அதையும் தூக்கி இதுலயே போட, போயிட்டிருந்ததும் போகாம மிதக்குது. இல்லையா கீழ் வீட்டுக்காரன் தலை விதி. இந்த ரெண்டு நவ நாகரீக சாதனத்துலயும் gel இருக்கு. தண்ணீரை உறிஞ்சிகிட்டு உப்பிகிட்டே போகும்.வேற என்ன சொல்ல....
வீட்டின் கொல்லைப்பக்கம் பாத்திரம் துலக்க சாம்பலும் புளியும் போட்டது அந்தக்காலம். பாத்திரம் விளக்கின தண்ணீயிலே முளைச்சது தக்காளி செடியும் மிளகாய் செடியும். இப்போ என்னடான்னா விம்முங்கிறாங்க ப்ரில்லுங்கிறாங்க அசல் எலுமிச்சைங்கிறாங்க. சபீனாவுல ஆரம்பிச்சது இந்த வில்லங்கம். பாத்திரம் விளக்கின கைல சிரங்கு வராமல் இருந்தா எங்கப்பன் செஞ்ச புண்ணியம். வீட்டுக்காரம்மா தொலைக்காட்சியிலே சீரியல் பார்க்கும்போது வேலைக்காரம்மா குழாயை தெறந்து விட்டா தண்ணி எங்க மிஞ்சும்.
எல்லாம் போகட்டும் கழிவு நீர் சுத்திகரிப்பாவது உண்டான்னு பார்த்தா அதுவும் இல்லை. எத்தனை நாளுக்கு வரும் இந்த தண்ணீ.
அம்மா ஆட்சியில மழை நீர் சேகரிப்புன்னு போட்டதுனால ஏதோ பரவால்ல. இல்லேன்னா அதும் கழிவு நீரோட போயி சேர்ந்திருக்கும். ஆத்துலே போற தண்ணீய கோலா கம்பெனிக்காரனுக்கு வித்துட்டு வெக்கமே இல்லாம அவன் கம்பெனி சரக்க வாங்கி மிக்ஸிங்ல ஊத்தி குடிக்கற முட்டாள் கும்பல்தானே நம்மல்லாம். இதுல அந்த கம்பெனிக்கு விளம்பரத்தில நடிச்சவரே இந்த பிரச்சினை பற்றிய படத்திலயும் நடிப்பாரு. ஐய் படம் நல்லாருக்குன்னு ப்ளாக்லே டிக்கெட் வாங்கிப் பார்த்துட்டு கை தட்டி பிகில் அடிக்கற அதி புத்திசாலிங்க நம்மதேன். நம்ம ஊருக்கு வர்ற கம்பெனி பூரா மறை நீர் உறிஞ்சறதுதான். . சாயப் பட்டறை, தோல் பதனிடுவதுன்னு வரிசையா...
இதுக்கப்பறம் 900 வருஷம் எதுக்கு? 90 வருஷம் போதும். நம்ம போய் சேர்ந்துடுவோம் .. அடுத்த சந்ததிக்கு கம்ப்யூட்டர்காரன் தண்ணீ ஊத்துவான் .. நமக்கெதுக்கு பொல்லாப்பு ..காலா படம் பார்த்துட்டு காலால மிதி படுவோம்.


0 Comments:
Post a Comment
<< Home