மனிதரில் இத்தனை நிறங்களா ?
பார்ட் 5
"அத்தனைக்கும் ஆசைப்படு" என்றார் ஒரு உணர்ந்தவர். அவர் உணர்ந்தவரா இல்லையா என்ற தர்க்கம் பிறகு வைத்துக்கொள்ளலாம்.
ஆசை, பேராசை, வெறி, அதுக்கும் மேல ..
ஆமாம்... ஒரு நேரத்திலே ஒரு தட்டுலேதான் சாப்பிட முடியும், ஒரு வட்டிலிலே தான் குடிக்க முடியும், ஒரு படுக்கையிலதான் படுக்க முடியும், ஒரு துணியைத்தான் உடுக்க முடியும்.. ஒரு துவாரத்தைத்தான் புணர முடியும். தொண்டைக்குழிக்கு கீழே போனதுக்கு அப்புறம் கம்பங்களியம், caviarம் ஒண்ணுதான்.. சுண்டக்கஞ்சியும், sakeயும் ஒண்ணுதான், வெளியேறும் போது வித்தியாசமே கிடையாது.. மல ஜலமாகத்தான் வெளியேறுகிறது.. எதற்கு இந்த மித மிஞ்சிய வெறி ..
"வரும்போதும் ஒண்ணும் கொண்டு வரல .. போகும்போதும் ஒண்ணும் கொண்டு போக முடியாது" என்கிற தலைவரின் சினிமா வசனத்திற்கு உச்சு கொட்டிய மக்கள் தனக்கு என்று வரும்போது சினிமா வேறு, நடைமுறை வேறு என்றார்கள்.
சேர்த்தவன் யாராவது நிம்மதியா இருக்கானான்னு பார்த்த .. இல்லே .. உடம்புலே ஈ மொய்க்குது. சேர்த்து வச்சதை வேலைக்காரன் சாப்பிடறான்.. மாற்றான் மனைவியை புணர்ந்தவனின் மனைவியை வேற்றான் புணர்கிறான். அடுத்த சந்ததி நெறியில்லாமல் வளர்கிறது. பிள்ளைகள் தெறி கெட்டு ஓடுகிறார்கள். மேலே போவது கீழே வரத்தான் செய்கிறது.
Charity begins at home என்றார்கள். இந்த சம்பவம் நடந்த மறுநாள் பேதலித்து வந்த பணிப்பெண்கள் இருவரையும் பயப்பட வேண்டியது நாம் அல்ல என்று விளக்கி, சில நாட்களுக்கு தேவையான சில்லறையை கொடுத்து அனுப்பினோம். வங்கிக்கோ தபால் ஆபீஸுக்கோ உடனடியாக சென்று மிதி படவேண்டாம் என்றும் சொன்னோம். சில்லரை எங்கிருந்து வந்தது ? சில வருடங்களுக்கு முன் பையனுக்கு பூணல் போட்ட போது நண்பரகளும், சொந்தங்களும் கொடுத்த சலவைத்தாள்கள் மனைவியின் கருப்பு பண முடிச்சிலிருந்தது. அடுத்த சில நாட்களுக்கு வீட்டுக்கு வந்த காய்கறிக்காரர்களும், இஸ்திரி அம்மாவுக்கும் சலவைத்தாள் சப்ளை ஈடேறியது.
கூட்டம் ஓய்ந்திருக்கும் என்று ஒரு சனிக்கிழமை வங்கிக்கு சென்றேன். கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. வன் புணரப்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களில் புகை குறைந்திருந்தது. வங்கி ஊழியரின் முகத்தில் அயர்ச்சி தென்பட்டது. சந்தடி சாக்கில் சிக்கிய extra 2000 நோட்டை திருப்பி தராமல் போன புதிய கருப்பு பண முதலையை பற்றி அங்கலாய்த்த அம்மணியை வருத்தத்துடன் மட்டுமே பார்க்க முடிந்தது. செக்கை கொடுத்து பணம் வாங்கினேன். வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றார்கள் .. அவ்வளவு செலவு ஏது? இருந்தால்தானே எடுப்பதற்கு ! உள்நாட்டு செலாவணிக்கே வழி இல்லாம திருடிக்கிட்டிருக்கோம், அயல் நாட்டு செலவாணிக்கு எங்கே போவது என்ற கௌண்டமணியின் வசனம் நினைவுக்கு வந்தது.
பக்கத்துக்கு வீட்டு பணிப்பெண் சீட்டு போட்டு சேமித்த பணம் மொத்தமாக வந்து மாட்டியிருந்தது, வங்கிக்கணக்கு சொந்த ஊரில்! ஆதார் அட்டை சொந்த ஊரில்.. பணம் செலுத்தும் இயந்திரம் வேலை செய்யாது என்ற அறிவிப்பு வேறு! பேந்த பேந்த முழித்தவளை, பதட்ட படவேண்டாம் என்று கூறி அமைதிப்படுத்தினோம். பையனையும் பெண்ணையும் வங்கிக்கு அனுப்பி டெபாசிட் செய்ய சொல்லி, தேவைப்பட்ட போது எடுத்து தருகிறோம் என்றபின் ஓய்ந்தது. அப்படியே யாராவது பணம் மாற்றித்தர வரிசையில் நிற்க கூப்பிட்டால் போய் வெய்யிலில் வேக வேண்டாம் என்ற அறிவுரை வேறு. வங்கிக்கு சென்ற என் மகள் ஒரு கூடை Perk சாக்லேட் வாங்கி அங்கிருந்த பணியாளருக்கு வினியோகம் செய்து நன்றி தெரிவித்தாள்.
எல்லாம் ஓய்ந்தது என்று சாயும் போதுதான் அடுத்த வாரம் மாதத்தின் முதல் வாரம் என்று நினைவுக்கு வந்தது.
Back to square one for the salaried class.
கதை முடிக்கும் முன்பு நினைவுக்கு வருவது கௌண்டமணியின் ஒலிக்கீற்று. "என்கிட்டே இனிமேல காசு இல்லேடா ! என்ன விடுங்கடா !!"
வயிற்றெரிச்சல் படலம் முற்றிற்று !

